search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் கொள்முதல்"

    • கீழ்பவானி பாசன பகுதியில் முதல்கட்டமாக 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.
    • டாஸ்மாக் மது பார்கள் ஏலம் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஈரோடு:

    கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக நசியனூர், நாதிபாளையம், கூகலூர், புதுவள்ளியம் பாளையம், அளுக்குளி மற்றும் கலிங்கியம் ஆகிய 6 இடங்களில் இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் திறக்கப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். அமைச்சர் சு.முத்துசாமி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். இந்த மையங்களில் முதல் தர நெல் குவிண்டால் 2310 ரூபாய்க்கும், பொது ரக நெல் குவிண்டால் 2265 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கீழ்பவானி பாசன பகுதியில் முதல்கட்டமாக 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அறுவடை கூடும் இடங்களில் மொத்தமாக 51 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்படும். இங்கு முதல் தர நெல் 23 ரூபாய் 10 காசுகளும், பொது ரகத்திற்கு 22.65 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 1 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளில் இருதரப்பு விவசாயிகளும் சமாதானம் அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். வேறு உள்நோக்கம் ஏதும் கிடையாது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் சீராக சென்றடைய வேண்டும்.

    இதற்காக நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சீரமைப்பு திட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீதிமன்ற அவதிப்பு எதுவும் செய்யவில்லை. அத்திகடவு-அவினாசி திட்டத்தில் இன்னும் 16 குளங்கள் மட்டுமே சோதனை நடத்தப்பட வேண்டி உள்ளது. ஒரு வார காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.

    டாஸ்மாக் மது பார்கள் ஏலம் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புகார் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதி விவசாயி கள், தாங்கள் அறுவடை செய்த நெல்லினை செஞ்சி ஒழுங்கு முறை விற்ப னைக் கூடத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வந்த னர். அப்போது இ.நாம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரி வித்து நெல் வியாபாரி களுக்கு ஆதரவாக, எடை போடும் ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் நெல் மூட்டைகள் தேங்கியது. இதையடுத்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் தற்காலிகமாக நிறுத்தப்படு வதாக அறிவிக்கப்பட்டது. இதனையறியாத விவசாயி கள் நெல் மூட்டைகளுடன் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வந்தனர். நெல் கொள்முதல் செய் யப்படாததை கண்டித்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த வாகனங்களை நடு ரோட்டில் விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    இதனையடுத்து, விவ சாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை மேல்மலை யனூர் அருகேயுள்ள வளத்தி, அவலூர்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதனையேற்ற விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அருகில் உள்ள மற்ற ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சென்றனர். இந்நிலையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்றும் நெல் கொள்முதல் செய்யப்பட வில்லை. இ-நாம் திட்டத் திற்கு எதிர்ப்பு தெரி வித்து 3-வது நாளாக இன்றும் எடைபோடும் தொழி லாளர்கள் பணிக்கு வர வில்லை. இவர்களுக்கு ஆதரவாக நெல் வியாபாரிகளும் வரவில்லை. இதனால் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இது தொடர்பாக போராட்டம் நடத்தும் ஊழியர்கள் மற்றும் நெல் வியாபாரிகளுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி இன்று பேச்சுவார்த்தை நடத்துவார் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரி கள் தெரிவித்தனர்.

    • நெல்லினை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்தனர்.
    • விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    விழுப்புரம்:

    செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக நெல் அறுவடை தொடங்கப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்லினை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விவசாயிகள் கொண்டுவந்தனர். அதன்படி நேற்று 4,600 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆனால் அந்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படவில்லை. இது குறித்து கமிட்டி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேலை செய்கின்ற எடை போடும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென மூட்டை மாற்ற மாட்டோம் என பணிகளை புறக்கணித்து உள்ளனர். இதனால் நேற்று கொண்டு வரப்பட்ட 4600 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தினமும் மழை பெய்து வருவதாலும், ஈ-நாம் திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்வதற்கு வியாபாரிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாலும் இப்பிரச்சனையில் சமூக தீர்வு ஏற்படும் வரை தங்களது விளைபொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு நேற்று இரவு தான் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் எதிரில் வைக்கப்பட்டது. இதனை அறியாத விவசாயிகள் கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலான நெல் மூட்டைகளை விற்பனைக்கு இன்றும் கொண்டு வந்திருந்தனர். அதிகாலையில் வந்த டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்டவைகளை உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் இதனை கண்டித்து நெல்மூட்டை கொண்டு வந்த வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் செஞ்சி - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போக்குவரத்து மற்றும் செஞ்சி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கமிட்டி கேட்டை திறந்து நெல் மூட்டைகளை உள்ளே அனுமதித்ததால் சாலை மறியல் முடிவுக்கு வந்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடந்த சாலை மறியலால் ஏராளமான வாகனங்கள் சிக்கி தவித்தன. இதனைத் தொடர்ந்து இன்று கொள்முதல் செய்யப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை. இது போன்ற செயல்கள் மறைமுகமாக வெளி வியாபாரிகளை ஊக்குவிக்கும் செயலாக உள்ளதென விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • 38 மையங்கள் மூலம் 4-ந் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-24 சொர்ணவாரி பருவத்தில் முதல் கட்டமாக 11 வட்டங்களில் 38 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் செப்டம்பர் 4-ந் தேதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியது.

    திருவண்ணாமலை வட்டத்தில் வெளுக்கா னந்தல், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் சோமாசிபாடி, அணுக்குமலை, உட்பட 38 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

    விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினை அடங்கலில் பெற வேண்டும்.

    நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்கு றிப்பிட்ட சான்றுகள், ஆதார். சிட்டா மற்றும் வங்கிகணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று நெல் கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

    பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்மந்தப்பட்ட விவசாயியின் தொலைபேசி எண்ணிற்கு" வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது" என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    பதிவு செய்த விண்ண ப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலு வலருக்கு அனுப்பப்பட்டு அவரால், பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் நிராகரிப்பு செய்யப்படும்.

    விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம். சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற காலதாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 9445245932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்) மற்றும் 6385420976 (தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்-அப் வாயிலாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரி செய்யப்படும்.

    எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடிநெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறுமாறு திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ், தெரிவித்துள்ளார்.

    • விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.
    • நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கடலூர் மண்டலத்தில் நடப்பு பருவத்துக்கு நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3-ம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனைக்காக இணைய வழியில் பதிவு செய் யும்போது பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.

    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும். பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறு வதன் மூலமும் விவசாயி களின் விவரத்தை துல்லிய மாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயி களின் சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா? என கொள்முதல் நிலை யங்களிலேயே சரிபார்த்துக் கொண்டு நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யார் ஒன்றியம், கடுகனூர் கிராமத்திலும், அனக்காவூர் ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்திலும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமை வகித்து 2 இடங்களிலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

    திறந்து வைத்து பேசுகையில்:-

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்தாண்டை போலவே தற்போது முதல் கட்டமாக செய்யாறு தொகுதி முழுவதும் 20 இடங்களிலும், அடுத்த வாரத்தில் இன்னும் கூடுதலாக 10 இடங்களிலும் என 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது.

    இதனை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி அரசின் நியாயமான விலையை பெற்று பொருளாதார வளர்ச்சி பெற வேண்டும் என்று பேசினார். 

    • இடைதரகர்கள் மூலம் வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து விசாரித்தனர்.
    • கையூட்டு கேட்பது உள்ளிட்ட தவறுகள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தாராபுரம், அலங்கியம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    விவசாயிகளிடம் இருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா அல்லது பணம் கையூட்டு பெறப்படுகிறதா அல்லது இடைதரகர்கள் மூலம் வெளி வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்து விசாரித்தனர்.

    இதுதவிர, நெல்கொள்முதல் நிலைய அலுவலர்களின் கலந்தாய்வு கூட்டத்தில், சட்டத்துக்கு புறம்பாக விவசாயிகளிடம் இருந்து கையூட்டு கேட்பது உள்ளிட்ட தவறுகள் தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    • வருகிற 1-ந் தேதி முதல் தொடங்குகிறது
    • ஆவணங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள வலியுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல் கொள்முதல் செய்வதற்காக 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்படுகிறது.

    அதன்படி தப்பூர், மேல் வீராணம், கீழ் வீராணம், பாணாவரம், சூரை, கொடைக்கல், செங்காடு, கூராம்பாடி கரிக்கந்தாங்கல், அனந்தாங்கல், திருமால்பூர், ஜாகீர் தண்டலம், ரெட்டி வலம், அகவலம், நெமிலி, பனப்பாக்கம், கீழ்களத்தூர், சயனபுரம், மகேந்திரவாடி, கீழ்வீதி, சிறுகறும்பூர், பெரும்புலிபாக்கம், வேடந்தாங்கல், சிறுவளையம், எஸ்.கொத்தூர், அத்திப்பட்டு, துரைபெரும்பாக்கம், அருந்ததிபாளையம், செய்யூர், எஸ்.என்.கண்டிகை ஆகிய 30 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா, வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் அசல் அடங்கல் ஆவணங்களுடன் சென்று முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்ப டுகிறார்கள்.

    நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவு கள் மேற்கொள்வார்கள். பதிவு உறுதி செய்ததும் சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும்.

    ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு செல்ல வேண்டும்.

    நெல் விற்பனை செய்ய வரும் போது நேரடி கொள்முதல் மையத்தில் பதிவுகள் மேற்கொண்ட ஆவணங்களுடன் சென்று இதற்கான நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
    • அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், மாலங்குடி கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்

    அப்போது அவர் தெரிவிக்கையில்,

    ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க 70 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்க திட்டமிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கி 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட துவங்கி உள்ளது. தொடர்ந்து திட்டமிட்டபடி மேலும் 20 அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுத்தப்படும். இதன் நோக்கம் இடைத் தரர்களை தடுத்து நேரடியாக அரசு கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்து அதிக லாபம் பெற வேண்டும் என்பதே ஆகும்.

    அந்த வகையில் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் அந்தந்த பகுதி விவசாயிகள் பதிவு செய்து தங்களது நெல் மூட்டைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்திடும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி நெல் மூட்டைகளை விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு அவரவர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் 125 டன்னுக்கு மேல் நெல் மூட்டைகள் விவசாயிகளிடமிருந்து பெற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நடப்பாண்டிற்கு விவசாயிகளிடமிருந்து 50,000 மெட்ரிக் டன் நெல் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். வியாபாரிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப கூடுதல் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தி உரிய விலைக்கு விற்பனை செய்து சரியான லாபத்தை பெற்று பயனடைய வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஜோதி பாசு, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர் செல்வம், துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழையால் நனைந்துபோன நெல்மணிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
    • 22 சதவீத ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதலுக்கு சிறப்பு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    காவிரி டெல்டா பகுதிகளில் பருவமழையால் நனைந்துபோன நெல்மணிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5-ந் தேதி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயலை மறுநாள் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் டி.ஆர்.பாலு, மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு அது தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், 22 சதவீத ஈரப்பதம் வரையிலான நெல் கொள்முதலுக்கு சிறப்பு அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுள்ளார்.

    • விவசாயிகளிடமிருந்து 3,162 மெட்ரிக் டன் நெல் ெகாள்முதல் நிலையத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின்போது, மண்டல மேலாளர் அருண்பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழக்கண்டனி, வேம்பத்தூர், மானா மதுரை ஊராட்சி ஒன்றியம் வாகுடி, பீசர்பட்டினம் ஆகிய பகுதிகளில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நேரடி கொள்முதல் நிலையங்களை கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், 2022-23-ம் கொள்முதல் பருவத்தில் 55 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 4 நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்று, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.

    விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை எவ்வளவு துரிதமாக கொள்முதல் செய்ய முடியுமோ? அந்த அளவிற்கு விரைந்து முடிக்க தேவையான பணிகளை திட்டமிட்டு அலுவலர்கள் செயல்பட வேண்டும்.

    கொள்முதல் நிலை யங்களில் பணியாற்றும், பணியாளர்களுக்கு அத்தியாவசிய தேவை களை உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் அலுவலர்கள் கண்காணித்து வர வேண்டும். அதேபோல் நெல் கொள்முதல் நிலை யத்திற்கு வரும் விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சாலை, வாகன, இட வசதி, போன்றவற்றை கூடுதலாக அமைக்க வேண்டும்.

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை விவசாயிகளிடம் இருந்து 3 ஆயிரத்து 162 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்ப ட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப் பெறுவதால் விவசாயிகளுக்குரிய லாபம் முழுமையாக கிடைக்கும்.

    விவசாயிகள் இதுபோன்ற அரசு கொள்முதல் நிலையங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மண்டல மேலாளர் அருண்பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.2,160/- ம், இதர நெல் ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி மொத்தம் ரூ.2,115 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் சாகுபடியில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் தங்களது நெல் அறுவடை மகசூலினை நல்ல விலைக்கு விற்பனை செய்ய காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மூலமாக 11 தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கீழ்கண்ட வருவாய் கிராமங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெறுகிறது. சிறுகாவேரிப்பாக்கம் குறுவட்டம், விஷார் கிராமத்திலும், பரந்தூர் குறுவட்டம், தொடூர் மற்றும் புரிசை கிராமங்கள், கோவிந்த வாடி குறுவட்டம், வேலியூர் மற்றும் கம்மவார்பாளையம் கிராமங்கள், சிட்டியம் பாக்கம் குறு வட்டம், சிட்டியம்பாக்கம் மற்றும் மருதம் கிராமங்களிலும், ஸ்ரீபெரும்புதூர் குறுவட்டம் (பிர்கா), நாவலூர் கிராமம் மற்றும் மதுரமங்கலம், மேல்மதுரமங்கலம் கிராமங்களிலும், படப்பை குறுவட்டம் (பிர்கா), அமரம்பேடு கிராமத்திலும், நெல் கொள்முதல் பணிகள் நடைபெறும்.

    சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100 சேர்த்து மொத்தம் ரூ.2,160/- ம், இதர நெல் ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி மொத்தம் ரூ.2,115 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய விரும்பும் விவசாய பெருமக்கள் அனைவரும் உரிய ஆவணங்களான அடங்கல் சான்று, ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேரில் கொண்டு சென்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×